அதிமுகவை யாராலும் வீழ்த்த முடியாது : துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அதிரடி

அதிமுகவை ஒருபோதும் யாராலும் வீழ்த்தமுடியாது என்று துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னை :

தமிழகத்தில் இன்னும் 3 மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிமுக, திமுக உள்பட அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கலைஞர் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா போன்ற மிக பெரும் அரசியல் ஆளுமைகள் இல்லாமல் நடைபெறும் தேர்தல் என்பதால் எந்த கட்சி அடுத்ததாக தமிழகத்தில் ஆட்சி பிடிக்க போகிறது என்று பொதுமக்களிடையே பெரும் ஆர்வம் அதிகரித்துள்ளது.

அதுமட்டுமன்றி அனைத்து கட்சிகளும் தமிழகத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு அனைத்தையும் செய்து தருவதாகவும், விவசாய கடன் மற்றும் கல்வி கடன் போன்றவற்றை ரத்து செய்வதாகவும் பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகிறார்கள்.

Read more – சென்னையில் மாஸ்டர் படம் பார்க்க வந்த மலேசிய பெண் : டிக்கெட் கிடைக்காததால் ஒரு தியேட்டரையே புக்கிங் செய்த ருசிகர சம்பவம்

இந்தநிலையில், திருவொற்றியூரில் அதிமுக பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு துணை முதல்வர் பன்னீர்செல்வம் கூறியதாவது : “திமுகவை அரசியலில் இருந்து அப்புறப்படுத்தவே அதிமுகவை எம்.ஜி.ஆர் தொடங்கினார். அதிமுக மிகப்பெரிய இயக்கம். அதனை யாராலும் வீழ்த்த முடியாது” என்று சூளுரைத்துள்ளார். மேலும் முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் 10 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கி உள்ளோம் என்று தெரிவித்த அவர், அடுத்து வரும் சட்டசபை தேர்தலில் நிச்சயமாக அதிமுக தான் ஆட்சியமைக்கும் என்றும் தெரிவித்தார்.

Exit mobile version