5 தொகுதி தாருங்கள்… இல்லையென்றால் தனித்து போட்டியிடுவோம்.. அர்ஜுன் சம்பத் பேட்டி

ரஜினி ஆதரவு எப்போதும் எங்களுக்கு உண்டு என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.

சென்னை :

அதிமுக – பாஜக கூட்டணியில் 5 சீட் கொடுக்காவிட்டால் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவோம் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது ;

ரஜினி அரசியல் கொள்கைகளோடு நாங்கள் செயல்பட்டு கொண்டிருப்பதால் அவருடைய ஆதரவு நிச்சயமாக எங்களுக்கு என்று நம்புகிறோம். மக்கள் நீதி மய்யம் மற்றும் சமத்துவ மக்கள் கட்சியுடன் நாங்கள் சேருவதற்கு வாய்ப்பில்லை. அவர்களின் கொள்கைகள் வேறு எங்களின் கொள்கைகள் வேறு என்றார்.

Read more – கூட்டணிக்கு கெஞ்சுவது அதிமுக தான் ! நாங்கள் அல்ல.. மீண்டும் சர்ச்சையை கிளம்பிய எல்.கே.சுதீஷ்

ராகுல் காந்தி அவர்கள் பிரச்சாரத்திற்கு தமிழகம் வந்து கிறிஸ்துவ நிறுவனங்கள் முழுமையாக அவரோடு கைகோர்த்து தமிழகத்தை ஆள நினைக்கிறது. ராகுல்காந்தி இந்திய தேசிய காங்கிரஸை ரோமன் கத்தோலிக்க காங்கிரசாக மாற்றிவிட்டார் என்றும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version