ஆப்பிள் நிறுவனத்தின் வருவாய் இருமடங்கு உயர்வு!

இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் வருவாய் இருமடங்கு உயர்ந்துள்ளது.

இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் வருவாய் டிசம்பர் 31 வரையிலான காலாண்டில் இருமடங்கு அதிகரித்துள்ளதாக அதன் தலைமை அதிகாரி டிம் குக் தெரிவித்துள்ளார்.

முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்த வருடம் ஆப்பிளின் வருவாய் ரூ. 8,14,270 ஆக உள்ளது. முந்தைய ஆண்டை விட இது 21 சதவீதம் அதிகம் ஆகும்.

இதற்கு முக்கிய காரணமாக ஐஃபோன் 12 சீரிஸ் சொல்லப்படுகிறது. வருடாந்திர வளர்ச்சியாக கடந்த வருடம் மட்டும் ஆப்பிள் நிறுவனம் 93 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

READ MORE- காலாண்டில் அசத்திய ஜியோ நிறுவனம்!

மேலும் கடந்த வருடத்துடன் நிறைவுற்ற காலாண்டில் ஆப்பிள் தனது பங்குகளை இருமடங்கு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version