எம் ஐ நிறுவனத்தின் xiaomi 12 ப்ரோ புதிய மொபைல் அறிமுக விழா சென்னை நார்த் உஸ்மான் சாலையில் உள்ள வசந்த் அண்ட் கோ கிளையில் இன்று நடைபெற்றது
எம் ஐ நிறுவனத்தின் தென்னிந்திய மண்டல விற்பனை மேலாளர் மல்லிகா அர்ஜுன்ராவ் தலைமையில் எம் ஐ நிறுவனத்தின் xiaomi 12 ப்ரோ என்ற மொபைல் அறிமுக விழா சென்னை சென்னை நார்த் உஸ்மான் சாலையில் உள்ள வசந்த் அன்கோ கிளையில் நடைபெற்றது
இதில் வசந்த் அண்ட் கோ இயக்குனர் வினோத் குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய மொபைலை அறிமுகம் செய்து வைத்தார்
இந்நிகழ்ச்சியில் எம் ஐ நிறுவனத்தின் தமிழ்நாடு மண்டல மேலாளர் ஜெய பிரகாஸ், தமிழ்நாடு தலைமை நிர்வாகி அரவிந்த், சென்னை தலைமை நிர்வாகி பிரசாந்த், வடசென்னை மாவட்ட விநியோகிஸ்தர் அரவிந்த், வசந்த் அண்ட் கோ மொபைல் விற்பனை நிர்வாகி செந்தில்,ஜெகன் உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்
முன்னதாக எம்ஐ நிறுவனத்தின் மொபைல்களை சென்ற மாதம் அதிக அளவு விற்பனை செய்த வசந்த் அண்ட் கோ நிறுவனத்திற்கு ரெட்மி நிறுவனத்தின் தென்னிந்திய விற்பனை மேலாளர் மல்லிகா அர்ஜுன் ராவ் எல்இடி டிவியையும் பரிசுத் தொகைக்கான காசோலையையும் வசந்த் அன்கோ இயக்குனர் வினோத்குமாரிடம் வழங்கினார்
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தென்னிந்திய விற்பனை மேலாளர் மல்லிகா அர்ஜுன் ராவ்
எம்ஐ நிறுவனம் புதிதாக xiaomi 12 ப்ரோ என்ற புதிய மொபைலை அறிமுகம் செய்துள்ளது இது வாடிக்கையாளர்களை கவரக்கூடிய வகையில் மிகவும் அற்புதமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது
எளிய முறையில் மிக அற்புதமான புகைப்படங்களை எடுக்க வதற்கான கேமரா வசதி இதில் இருக்கிறது
மேலும் அனைத்து அம்சங்கள் நவீன டெக்னாலஜி அடங்கிய மொபைல் ஆக இது இருக்கின்றது எனவும் தெரிவித்தார்