ஒப்போவின் புதிய 5ஜி ஸ்மார்ட்ஃபோன்கள் அறிமுகம்!

இந்திய சந்தையில் ஒப்போ நிறுவனம் புதிய 5ஜி ஸ்மார்ட்ஃபோன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

இந்திய மொபைல் சந்தையில் ஒப்போ நிறுவனம் இந்த வருடம் தனது 5ஜி ஸ்மார்ட்ஃபோன்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் புதிய ஸ்மார்ட்ஃபோன்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக ரெனோ5 ப்ரோ ஸ்மார்ட்ஃபோனினை முதல் 5ஜி மாடலாக ஒப்போ அறிமுகப்படுத்தியது. அந்த வகையில் இந்த வருடம் தனது ஸ்மார்ட்ஃபோன் எண்ணிக்கையை அதிகப்படுத்த அனைத்து விலை பிரிவுகளிலும் அறிமுகப்படுத்த ஒப்போ திட்டமிட்டுள்ளது.

READ MORE- பிரைவசி விவகாரத்தில் அரசிடம் மவுனம் கலைத்த வாட்ஸப்!

தற்சமயம் உலகம் முழுக்க 20க்கும் அதிகமான நாடுகளில் ஒப்போ தனது 5ஜி தொழில்நுட்ப திட்டத்தை கட்டமைப்பதில் தீவிரமாக உள்ளது.

Exit mobile version