சாம்சங் கேலக்ஸியின் ப்ரோ பட்ஸ் விலை விவரங்கள் வெளியானது!

சாம்சங் கேலக்ஸியின் ப்ரோ பட்ஸ் மாடல் விலை இணையத்தில் வெளியாகியுள்ளது.

சாம்சங் நிறுவனத்தின் ப்ரோ பட்ஸ் மாடல் விலை இணையத்தில் வெளியாகியுள்ளது. அதன்படி, புதிய சாம்சங் கேலக்ஸியின் விலை 199 டாலர்கள் எனவும், இந்திய மதிப்பில் சுமார் ரூ. 14,600 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

சாம்சங் நிறுவனம் விலையை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யும் பட்சத்தில் சாம்சங்கின் அதிக விலை கொண்ட இயர் பட்ஸாக இது இருக்கும். மேலும் இது ஆப்பிள் மற்றும் சோனியின் ஏர்பட்ஸ்ஸூக்கும் போட்டியாக இருக்கும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

READ MORE- டெலிட் ஆப்ஷனை நீக்கிய ஃபேஸ்புக். குழப்பத்தில் பயனாளர்கள்!

இதற்கு முன்பு சாம்சங் நிறுவனம் கேலக்ஸி பட்ஸ் லைவ் எனும் பெயரில் புதிய இயர்ஃபோனை அறிமுகம் செய்தது. இதன் மதிப்பு சர்வதேச சந்தையில் 169 டாலர்கள் எனவும், இந்திய சந்தையில் ரூ. 14,900 எனவும் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. அந்த வகையில் இந்த புதிய மாடலின் மதிப்பு ரூ. 20,000 வரையிலும் நிர்ணயிக்க வாய்ப்புள்ளது எனவும் தெரிகிறது.

Exit mobile version