எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 29 மீனவர்கள் சிறைபிடிப்பு : 18ம் தேதி வரை சிறை காவலில் அடைக்க உத்தரவு

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 18ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு:

ராமேஸ்வரம் கடலில் இருந்து கடந்த திங்கட்கிழமை சுமார் 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் மீன்பிடிக்க சென்றுள்ளனர்.கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் 4 விசைப்படகுகளையும், 29 மீனவர்களையும் சுற்றிவளைத்து,எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி வழக்குப்பதிவு செய்தனர்.

இன்று மன்னார் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது 3 படகில் சென்ற 22 மீனவர்களை வருகின்ற 18 ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளது.மேலும் மீதமுள்ள 7 மீனவர்களை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கவும் இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது.இதையடுத்து 29 மீனவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு இலங்கை சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்.

Read more – வேறு அமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்துவதை மத்திய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்: மத்திய அரசுக்கு டெல்லியில் போராடும் விவசாயிகள் கோரிக்கை

இலங்கை நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதன் காரணமாக 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version