பிரிட்டனின் புதிய பிரதமர் ராணி எலிசபெத்திடம் ஆசி பெற்றார்

பிரிட்டனின் புதிய பிரதமர் லிஸ் ட்ரஸ், ராணி எலிசபெத்திடம் ஆசி பெற்றார்.

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவி விலகியதையடுத்து கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த 2ம் தேதி முடிவடைந்தது. இந்த தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும் இங்கிலாந்து நிதியமைச்சருமான ரிஷி சுனக்கும், வெளியுறவுத்துறை அமைச்சரான லிஸ் ட்ரஸூம் போட்டியிட்டனர். இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவிய நிலையில் சுமார் 1.60 லட்சம் பேர் வாக்களித்தனர்.

இந்த வாக்குகள் எண்ணப்பட்டு நேற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் லிஸ் ட்ரஸ் 20,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இங்கிலாந்தின் அரசியலமைப்பு சட்டப்படி ஆளும் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்படும் நபரே நாட்டின் பிரதமராக நியமிக்கப்படுவார். இந்நிலையில், ராணி இரண்டாம் எலிசபெத்தை லிஸ் ட்ரஸ் சந்தித்து ஆசிப்பெற்றார். அப்போது, ராணி இரண்டாம் எலிசபெத், லிஸ் ட்ரஸை பிரதமராக அறிவித்தார்.  

Exit mobile version