லடாக் எல்லை பிரச்சனை; இந்தியா – சீனா இடையே மீண்டும் பேச்சுவார்த்தை?

லடாக் எல்லையில் நிலவும் பதற்றத்துக்கு தீர்வு காணும் விதமாக மீண்டும் இந்தியா – சீனா இடையே வருகின்ற அக்டோபர் 12 ஆம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறவிருப்பதாக இந்திய ராணுவ வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளது.

லடாக் எல்லையில் கால்வன் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலை அடுத்து இந்தியா மற்றும் சீன அரசு அவரவர் ராணுவ வீரர்களை  அங்கு குவித்துள்ளதால் பதற்றம் நிலவுகிறது. எல்லையில் நிலவும் பதற்றத்தை தணிக்கும் விதமாக இருநாடுகளும் இதுவரை 6 கட்டங்களாக ராாணுவ கமாண்டர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் நிலையில் பேச்சுவார்தைகள் நடத்தியுள்ளன. இருந்த போதும் இதுவரை எல்லையில் பதற்றம் சற்றும் தணியாத நிலை தான் நீடித்துவருகிறது.

இந்நிலையில் தான் லடாக்கின் கிழக்கு பகுதியில், இந்தியா- சீனா ராணுவ உயரதிகாரிகள் நிலையில் மீண்டும் அக்டோபர் 12 ஆம் தேதி பேச்சுவார்த்தை நடைபெறவிருப்பதாக இந்திய ராணுவ வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

Exit mobile version