லிபியாவில் கடந்த 9 ஆண்டுகளாக நடந்த போர் முடிவுக்கு வந்தது…

லிபியாவில் ஆட்சியில் இருந்த சர்வாதிகாரி முகமது கடாபி, 2011ம் ஆண்டு கொல்லப்பட்டதையடுத்து அந்நாட்டில் உள்நாட்டு போர் வெடித்தது.


அந்நாட்டில் ஆட்சியை கைப்பற்ற பல்வேறு ஆயுதக் குழுக்களிடையே மோதல் ஏற்பட்டு தொடர்ந்து போர் நடந்து கொண்டு வந்தது.

குறிப்பாக அங்கு கொல்லப்பட்ட கடாபியின் ஆதரவாளரான கலிபா கப்தார் தலைமையிலான ஆயுதக் குழுவினர் நாட்டின் பல பகுதிகளை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இந்த குழுவினர், சர்வதேச அங்கீகாரம் பெற்ற அரசுப் படைகளுடன் சண்டையிட்டு வருகின்றனர்.

அரசுப் படை வசம் உள்ள தலைநகர் திரிபோலியை கைப்பற்றுவதற்காக கலிபா கப்தார் தலைமையிலான ஆயுதக் குழுவினர் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து தீவிரமான தாக்குதலை நடத்தி வந்தனர். இதனால் லிபியா போர்க்கமாக காட்சி அளித்தது.

இங்கு நடந்த உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். பல்வேறு வெளிநாட்டு படையினரும் கிளர்ச்சியாளர்கள் மற்றும் அரசு படையினர் என இருதரப்புக்கும் ஆதரவாக சண்டையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் 9 ஆண்டுகளாக நடைபெற்று வந்த உள்நாட்டு போரை உடனடியாக நிறுத்துவதாக ஐ.நா. சபையால் அங்கீகரிக்கப்பட்ட திரிபோலியை தலைநகராக கொண்ட லிபிய அரசு தலைமை
நேற்று அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு வந்த சில மணி நேரங்களில் கடாபியின் ஆதரவு கிளர்சியாளர் கலிபா கப்தார் தலைமையிலான கிளர்ச்சியாளர்கள் குழுவும் தாங்களும் லிபியாவில் சண்டை நிறுத்தத்தை கடைபிடிப்பதாக தெரிவித்ததுள்ளது.

எண்ணெய் வளம் மிக்க லிபியாவில் விரைவில் பொதுத்தேர்தலை நடத்த இரு தரப்பினரும் விருப்பம் தெரிவித்துள்ளனர். இதனால் தற்போதைய சண்டை நிறுத்தம் உள்நாட்டுப்போரை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டுவர எடுக்கப்பட்ட முதல் முயற்சி என ஐ.நா. உள்பட பல்வேறு நாடுகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Exit mobile version