பிரசவத்தின் போது பிறந்த குழந்தையின் தலையை வெட்டி பெண்ணின் கர்ப்பப்பைக்குள் வைத்த மருத்துவ ஊழியர் தலைமறைவான நிலையில், அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
பாகிஸ்தானில் சிந்து மாநிலம் தர்பார்க்கர் மாவட்டத்தைச் சேர்ந்த சனா குமார் (32) என்கிற பெண், பிரவசத்துக்காக மருத்துவமனைக்கு வந்துள்ளார். திடீரென பிரசவ வலி ஏற்பட்டநிலையில், மருத்துவமனையில் மருத்துவர்கள் யாரும் இல்லாமல் இருந்துள்ளனர்.
இதனால் அங்குள்ள மருத்துவ ஊழியர் பெண்ணுக்கு பிரசவம் பார்த்துள்ளார். குழந்தையை வெளியே எடுத்தும் போது, தலையை அவர் வெட்டிவிட்டதாக தெரிகிறது. அதை தொடர்ந்து தலை கர்ப்பப்பையிலே இருந்துள்ளது. இது பெண்ணின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டது.
உடனடியாக அவர் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு வயிற்றில் இருந்த குழந்தையின் தலை அகற்றப்பட்டது. இதுதொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த மருத்துவ ஊழியர் தலைமறைவாகிவிட்டார். அவரை தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.