உக்ரைன் மீதான ரஷியாவின் போரில் வாக்னர் குழு என்ற தனியார் கூலிப்படையும் இணைந்து செயல்புரிந்தது. ரஷியாவுக்கு எதிரான தனியார் படையின் கிளர்ச்சியானது 24 மணி நேரத்தில் முடிவுக்கு வந்துவிட்டாலும், ரஷியா-உக்ரைன் போரில் அடுத்து என்ன நடக்கும் என ஒரு கேள்வி எழுந்து இருக்கிறது. இந்த சம்பவத்தினால் அதிபர் புதினுக்கு பின்னடைவாக இருக்கும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்து இருக்கின்றனர். வாக்னர் படையின் கிளர்ச்சி முறியடிக்கப்பட்டதை தொடர்ந்து ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் பத்திரிக்கையாளர்களிடம் கூறியது:- தற்போது ரஷியாவில் உள்நாட்டு கிளர்ச்சி உருவானால் அது நிச்சயம் தோல்வியில் தான் முடியும். ரஷிய ராணுவ வீரர்கள் ஒருவரை ஒருவர் கொல்ல வேண்டும் என மேற்கு நாடுகளின் எண்ணம் இருக்கிறது. வாக்னர் படையை வீழ்த்த உறுதுணையாக இருந்த ரஷ்ய மக்களுக்கு நன்றி. வாக்னர் படை ரஷிய ராணுவத்தில் இணையலாம் அல்லது பெலாரஸ் நாட்டிற்கு செல்லலாம். ரஷியாவில் ரத்தம் சிந்துவதை தவிர்க்க இறங்கிய வாக்னர் கூலிப்படை போராளிகள் மற்றும் தளபதிகளுக்கு நன்றி என்று புதின் கூறினார்.
ரஷ்யாவை அதிர வைத்த கூலிப்படை பற்றி அதிபர் புதின் விளக்கம்!
-
By mukesh

Related Content
ISRO-வில் புதிய வேலைவாய்ப்பு; விஞ்ஞானி முதல் தொழில்நுட்ப உதவியாளர் வரை விண்ணப்பிக்க வாய்ப்பு!
By
daniel
August 31, 2026
இந்தியாவில் பாலிமர் ரூபாய் நோட்டுகளா? புதிய நிபந்தனைகளுடன் தயாராகிறது ரிசர்வ் வங்கி!
By
daniel
August 31, 2026
ஆசிய மகளிர் கோப்பை: தாய்லாந்தை வீழ்த்தி வெற்றிக் கணக்கை தொடங்கிய இந்தியா!
By
daniel
August 31, 2026
68.5 டன் நிவாரணம்… 8 பாலங்கள்… மீட்புக் குழுக்கள்; தோள் கொடுக்கும் தோழனாக இந்தியா!
By
daniel
August 30, 2026
நேபாளத்தில் சிக்கிய 319 தமிழர்களில் 219 பேர் மீட்பு!
By
daniel
August 30, 2026
HDFC Bank CEO சஷிதர் ஜகதீஷன் விலகுகிறார்; அக்டோபர் 26-ல் ஓய்வு!
By
daniel
August 30, 2026