விண்வெளி தொழில்நுட்பத்தில் புதிய சாதனை : ஒரே நேரத்தில் செலுத்தப்பட்ட 143 செயற்கை கோள்கள்

விண்ணில் ஒரே நேரத்தில் 143 செயற்கை கோள்களை செலுத்தி “ஸ்பேஸ் எக்ஸ்” நிறுவனம் புதிய சாதனை படைத்துள்ளது. 

அமெரிக்கா :

அமெரிக்கா எலான் மஸ்க்கைத் தலைவராகக் கொண்ட ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி தொழில்நுட்பத்தில் உலகில் முன்னணி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் தயாரித்த பால்கன்-9 என்ற ராக்கெட் புளோரிடா மாகாணம் கேப் கேனவரல் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து வெற்றிகரமாக சமீபத்தில் விண்ணில் ஏவப்பட்டது.

Read more – பிரேசிலில் சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கியது : கால்பந்து வீரர்கள் உள்பட 5 பேர் பலி

முதல்கட்டத்தில் இருந்த பூஸ்டர் பூமிக்கு திரும்பி அட்லாண்டிக் கடலில் தயாராக நிறுத்தப்பட்டிருந்த மிதவையில் தரையிறங்கியது. அதன்பிறகு இரண்டாவது கட்டத்தில் பால்கன்-9 ராக்கெட் புறப்பட்ட 9 வது நிமிடத்தில் செயற்கை கோள்களை தாங்கிய இரண்டாம் கட்டம் புவிவட்டப் பாதையை நோக்கி சென்றது. இந்த ராக்கெட்டில் செலுத்தப்பட்ட 143 சிறியரக செயற்கைக்கோள்களும் வெற்றிகரமாக புவிவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.

இதில் அரசு தொடர்பான மற்றும் வணிகரீதியானவை என 133 செயற்கைக்கோள்களும், 10 ஸ்டார்லிங்க் சாட்டிலைட்களும் உள்ளடக்கம். இணையசேவையை வழங்கும் ஸ்டார்லிங்க் திட்டத்தில், ஏற்கனவே 1015 செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்ட நிலையில், நேற்று மேலும் 10 செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடக்கத்தக்கது. ஏற்கனவே கடந்த 2017 ல் இஸ்ரோ நிறுவனம் 104 செயற்கைக்கோள்களை ஒரே நேரத்தில் விண்ணில் செலுத்திய நிலையில், தற்போது ஸ்பேஸ் எக்ஸ் 143 செயற்கைக்கோள்களை செலுத்தி புதிய சாதனையை படைத்துள்ளது.

Exit mobile version