ஆப்கானிஸ்தானில் அரங்கேறிய கொடூரம் : 7 ராணுவ வீரர்களுக்கு விஷம் வைத்த சக ராணுவ வீரர்

ஆப்கானிஸ்தானில் சக ராணுவ வீரர் 7 பேரை ராணுவ வீரர் ஒருவர் விஷம் வைத்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காபூல்:

ஆப்கானிஸ்தானின் தெற்கு பகுதியில் உள்ள கஜினி மாகாணத்தில் ராணுவ சோதனைச்சாவடி ஒன்றில் நேற்று முன்தினம் இரவு 8 ராணுவ வீரர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அப்போது பணியில் இருந்த ஒரு ராணுவ வீரர் தனது சக வீரர்கள் 7 பேருக்கும் உணவில் விஷத்தை கலந்து பரிமாறியுள்ளார். இதனை அறியாத வீரர்கள் அந்த உணவை உண்ட சற்று நேரத்தில் வலியில் சுருண்டு விழுந்தனர்.அரை மயக்கத்தில் இருந்த அந்த 7 ராணுவ வீரர்கள் தங்களை காப்பாற்றும்படி கெஞ்சிய போது அவர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் சக வீரர்களை சுட்டு கொன்றுள்ளார்.

Read more – கிணற்றில் மூழ்கி இறந்த மகளின் கண்களை தானம் செய்த பெற்றோர்கள் : கிராம மக்கள் நெகிழ்ச்சி

அதன்பிறகு, அங்கு இருந்த ராணுவ சோதனை சாவடியில் இருந்த துப்பாக்கி, வெடிமருந்துகள் மற்றும் மேலும் சில ஆயுதங்களை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இதுகுறித்து ஆப்கானிஸ்தான் ராணுவம் தீவிர விசாரணை நடத்தி வருகிறது. தப்பி சென்ற அந்த நபருக்கு ஏதேனும் ஒரு தீவிரவாதிகள் அமைப்புகளுடன் தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகமும் எழுந்து உள்ளது. இந்த சம்பவம் கஜினி மாகாணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version