சென்னை மக்களே உஷார்… ‘மெட்ராஸ் ஐ’ பரவுகிறது

சென்னையில் மெட்ராஸ் ஐ பரவி வருவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

காலநிலை மாற்றத்தால் சென்னையில் மெட்ராஸ் ஐ பரவி வருகிறது.மருத்துவமனையில் தினமும் குறைந்தபட்சம் 50 பேர் சிகிச்சைக்கு வருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

கண் விழியையும், இமையையும் இணைக்கும் ஜவ்வு படலத்தில் ஏற்படும் வைரஸ் தொற்றுதான் இந்த மெட்ராஸ் ஐ.

அறிகுறிகள்:

*கண் எரிச்சல்

*விழிப்பகுதி சிவந்து போதல்

*நீர் சுரந்து கொண்டே இருத்தல்

*இமைப்பகுதி ஒட்டிக் கொள்ளுதல் போன்றவை

பரவும் விதம்:

இது காற்று மூலமாகவும், மாசு காரணமாகவும் பரவுகிறது. மெட்ராஸ் ஐ பாதிக்கப்பட்டவர்களின் கைக்குட்டையை பயன்படுத்துதல். மெட்ராஸ் ஐ பாதிக்கப்பட்டவர்கள் ஏசி அறையில் இருந்தால் இது விரைவாக பரவும்.

தடுக்கும் முறை:

கண்டறிந்தவுடனே சிகிச்சை அளிக்க வேண்டும்.

மெட்ராஸ் ஐ இருந்தால் தனி அறையில் இருக்க வேண்டும்.

தனியாக டவல்,சோப், கைக்குட்டை போன்றவற்றை பயன்படுத்த வேண்டும்.

மெட்ராஸ் ஐ பாதிப்பு வந்தவர்களின் கண்ணை பார்க்காமல் இருப்பது நல்லது.

-பா.ஈ.பரசுராமன்.

Exit mobile version