சர்ச்சையில் சிக்கிய இயக்குநர் பாலா மற்றும் ஆர்.கே. சுரேஷ்!

படத்தலைப்பு விவகாரத்தில் இயக்குநர் பாலாவும் தயாரிப்பாளர் ஆர்.கே சுரேஷ்ஷூம் சர்ச்சையில் சிக்கியுள்ளனர்.

இயக்குநர் பாலாவும் தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ்ஷூம் இணைந்து பி ஸ்டுடியோஸ் நிறுவனத்திற்காக ‘விசித்திரன்’ என்ற படத்தை தயாரித்து வருகின்றனர்.

இந்த படத்தில் தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் கதாநாயகனாக நடிக்கிறார்.

இந்த நிலையில் சிஎஸ்கே ஃபிலிம்ஸ் சதீஷ்குமார், ‘விசித்திரன்’ என்ற தலைப்பை கடந்த 2015ம் வருடமே பதிவு செய்து கடந்த மார்ச் வரையுமே தான் புதுப்பித்து வந்ததாகவும், இந்த தலைப்பு தனக்கு மட்டுமே உரிமை உள்ளது என்றும் கூறி பாலா, சுரேஷ் தயாரிக்கும் இந்த படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளார்.

READ MORE- நடிகர் விமல் மீது ஊர் மக்கள் வழக்கு பதிவு!

வழக்கை விசாரித்த நீதிபதி இயக்குநர் பாலா, சுரேஷ் இருவருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டதுடன் வழக்கை வரும் 25ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Exit mobile version