
ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டு இறந்துபோன கணவரின் குடும்பத்தை பழிவாங்க, கணவனின் அண்ணன் மகனை பாலியல் வன்கொடுமை செய்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் பிலிபத் பகுதியைச் சேர்ந்தவர் இளம்பெண் (23). இவருடைய கணவர் ஹெச்.ஐ.வி-யால் இறந்துபோன நிலையில், அதே வைரஸ் பாதிப்பு கொண்ட பெண் தனியாக வசித்து வந்தார்.
இந்நிலையில் இறந்துபோன கணவரின் அண்ணன் குடும்பம் பெண்ணை பார்ப்பதற்காக பிலிபத்துக்கு வந்துள்ளனர். கணவனால் தனக்கு இப்படியொரு நோய் வந்துவிட்டதே என்கிற விரக்தியில் இருந்த அப்பெண், கணவன் குடும்பத்தினரை பழிவாங்க நினைத்தார்.
வீட்டுக்கு வந்த கணவனுடைய அண்ணனின் 15 வயது மகனை யாரும் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து பாலியல் வன்கொடுகை செய்துள்ளார். இதையாரிடமும் சொல்லக்கூடாது என்று சிறுவனை அப்பெண் மிரட்டியுள்ளார்.
மேலும் கடந்த மார்ச் மாதம் சிறுவன் வசிக்கும் ஊருக்குச் சென்ற அப்பெண், அங்கு வைத்து மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதை சிறுவனின் தாயார் பார்த்துவிட்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
மகனை பிடித்து விசாரித்த போது சிறுவன், தனக்கு நேர்ந்த கொடுமையை தெரிவித்துள்ளார். உடனடியாக அருகேயுள்ள மகளிர் காவல்நிலையத்தில் சிறுவனின் குடும்பத்தினர் புகார் அளித்தனர். இதையடுத்து அந்த பெண்ணை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
கணவனின் அண்ணன் மகனுக்கு ஹெச்.ஐ.வி நோயை பரப்பும் நோக்கில் பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் காவல்துறையிடம் தெரிவித்துள்ளார். ஒன்றுமரியாத சிறுவனுக்கு ஏற்பட்டுள்ள இந்த சம்பவம் உத்தரப் பிரதேசம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
