சத்தீஸ்கரில் 18 வயதான இளம்பெண் 7 மாதங்களில் 7 முறை விற்பனை : மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட பரிதாபம்

சத்தீஸ்கரில் 18 வயதான நிரம்பிய இளம்பெண் ஒருவரை 7 மாதங்களில் 7 முறை விற்பனை செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஜாஷ்பூர் :

சத்தீஸ்கர் மாநிலம் ஜாஷ்பூர் பகுதியைச் சேர்ந்த தந்தை ஒருவர் தனது மகளுடன் வாழ்ந்து வருகிறார். தந்தைக்கு உதவியாக இருந்த 18 வயது இளம்பெண்ணை அவரது உறவினர் ஒருவர் மத்தியப்பிரதேசத்தில் வேலை வாங்கித் தருவதாக அழைத்துச் சென்றுள்ளார்.

ரூ.20ஆயிரத்துக்கு அந்த இளம்பெண்ணை ஒருவரிடம் விற்று அதன் தொடர்ச்சியாக பலராலும் விற்கப்பட்டும், வாங்கப்பட்டும் உள்ளார். இதேபோல் மாதம் ஒருவர் என்ற கணக்கில் கடந்த 7 மாதங்களில் 7 முறை அவரை வைத்து வியாபாரம் நடந்துள்ளது.

Read more – எனக்கு பிடிச்ச வேப்பமரத்தை வெட்டிட்டாங்க.. ப்ளீஸ் ஆக் ஷன் எடுங்க.. வனத்துறையை அழைத்த 8 ம் வகுப்பு சிறுவன்

இறுதியாக அந்த இளம்பெண்ணை உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த சந்தோஷ் என்பவர் ரூ.70ஆயிரம் கொடுத்து வாங்கியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.மேலும், அந்த பெண்ணை தன்னுடைய மனவளர்ச்சி குன்றிய மகனுக்கு அவர் வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைத்துள்ளார்.

இதனால் மன உளைச்சல் அடைந்த அந்த இளம்பெண் கடந்த செப்டம்பர் மாதத்தில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது தொடர்பாக காவல்துறையினர் இளம்பெண்கள் விற்கப்படுவது போன்றவற்றை தடுக்கவும் இனிமேல் தடுக்காமல் இருக்க விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Exit mobile version