சச்சின் மற்ற துறைகளை பற்றி பேசும்போது கவனமாக இருக்க வேண்டும் : தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கருத்து

சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட்டை தவிர பிற துறைகளை பற்றி பேசும்போது கவனமாக இருக்க வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கருத்து தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி :

டெல்லி நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டம் குறித்து பல வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பிரபலங்கள் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர். அதே போல் அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாப் பாடகி ரியான்னா கடந்த வாரம் விவசாயிகளின் புகைப்படத்தை பதிவிட்டு, இது குறித்து ஏன் நாம் பேசவில்லை?” என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், மத்திய அரசிற்கு ஆதரவாகவும், விவசாயிகளின் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருத்து ஒன்றை பதிவு செய்தார். இந்த கருத்தானது தற்போது வரை பல விமர்சனங்களை பெற்று வருகிறது.

Read more – ஏழை மீனவரின் கையில் சிக்கிய அரியவகை முத்து.. ஒரே நாளில் மாறியது அவரது குடும்ப சொத்து..

இந்தநிலையில், கிரிக்கெட்டை தவிர பிற துறைகளை பற்றி பேசும்போது சச்சின் டெண்டுல்கர் கவனமாக இருக்க வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில்,

விவசாயிகள் போராட்டம் விவகாரத்தில் இந்தியப் பிரபலங்களின் நிலைப்பாடு குறித்து நிறைய பேர் கூர்மையாக எதிர்வினை ஆற்றியுள்ளனர். மற்ற துறைகள் குறித்து பேசும்போது சச்சின் டெண்டுல்கர் கவனமாக இருக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

Exit mobile version