வந்து விட்டது வந்தே பாரத் ரயில் சேவை!

பிரதமர் துவக்கி வைக்கிறார்!போபால், இந்திய ரெயில்வேயின் மதிப்புமிக்க ரெயில் சேவைகளில் ஒரு முக்கியமான சேவையான வந்தே பாரத் ரெயில் 2019-ம் ஆண்டு வாக்கில் துவங்கப்பட்டது.இருப்பினும் தற்போது பல மாநிலங்களில் வந்தே பாரத் ரெயில்கள் தொடர்ந்து இயக்கப்பட்டு கொண்டு வருகின்றன. இந்த நிலையில், மத்திய பிரதேசத்தில் இன்று 5 வந்தே பாரத் ரெயில் சேவைகள் இயக்கப்பட இருக்கிறது. இதனை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார் என செய்திக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. மத்திய பிரதேசத்தின் போபால்- ஜபல்பூர், கஜூராஹோ- போபால்- இந்தூர், கோவா- மும்பை, ஹதியா- பாட்னா மற்றும் தார்வாட்- பெங்களூரு ஆகிய வழித்தடங்கள் இடையே வந்தே பாரத் ரெயில் சேவையை இன்று பிரதமர் தொடங்கி வைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version