
இந்தியாவில் லட்சக்கணக்கான கணக்குகளை முடக்கி வாட்ஸ் ஆப் நிறுவனம் செய்துள்ள அதிரடி நடவடிக்கையால் பயனர்களிடையே அதிர்ச்சி உருவாகியுள்ளது.
ஃபேஸ்புக் நிறுவனம் அண்மையில் தன்னுடைய தாய் நிறுவனத்துக்கு மெட்டா என்று பெயர் சூட்டியது. இதன் கீழ் இயங்கும் முக்கிய செயலிகளில் ஒன்று வாட்ஸ் ஆப். அவ்வப்போது புதுப்புது அம்சங்களை வெளியிட்டு வரும் வாட்ஸ் ஆப், பயனர்களின் செயல்பாடுகளில் சில கொள்கைகளையும் உருவாகியுள்ளது.
அதை மீறி நடப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அந்நிறுவனம் தவறுவது கிடையாது. ஒவ்வொரு மாதமும் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை தொடர்பாக வாட்ஸ் ஆப் அறிக்கை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் கடந்த பிப்ரவரி மாத நடவடிக்கை குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி பிப்ரவரி மாதத்தில் இந்தியாவில் மட்டும் கொள்கை விதிமீறல்களில் ஈடுபட்ட 14 லட்சத்து 26 ஆயிரம் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக வாட்ஸ் ஆப் தெரிவித்துள்ளது. பயனர்களின் தரப்பில் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் மற்றும் புகார்களை வைத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப சட்ட விதிகளின் படி இந்நடவடிக்கையை வாட்ஸ் ஆப் மேற்கொண்டுள்ளது. வாட்ஸ் ஆப் உட்பட ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு மாதமும் தொழில்நுட்ப நிறுவனங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளை அறிக்கையாக சமர்பிக்க வேண்டு இந்த சட்டத்தின் முக்கிய அம்சமாகும்.
வாட்ஸ்அப் மூலம் குற்றச்சாட்டுகளை மின்னஞ்சல் மற்றும் கடிதம் மூலம் தெரியப்படுத்தலாம். grievance_officer_wa@support.whatsapp.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு பயனர்கள் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்யலாம். ஒருவேளை பயனர்கள் குறைதீர்க்கும் அலுவலரை அணுகினால், அதன்கீழ் பதிவிடப்படும் குற்றச்சாட்டுகள், வாட்ஸ்அப் நிறுவனத்தின் பிரத்தியேக டூல்கள் கொண்டு உடனடியாக தணிக்கை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
