12ம் வகுப்பு தேர்ச்சி போது ரூ.81,000 வரை சம்பளம்

எல்லை பாதுகாப்பு படையில் (Border Security Force) காலியாகவுள்ள தலைமை காவலர் (Head Constable) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 247 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர் 12ம் வகுப்பு அல்லது ஐ.டி.ஐ படித்திருக்க வேண்டும் எனவும், அவர்களது வயது 18 முதல் 25க்குள் இருக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க மே 12ம் தேதி இறுதி நாளாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.25,500 முதல் ரூ.81,100 வரை வழங்கப்படுகிறது. இதுகுறித்த கூடுதல் விவரங்களை அறிய www.bsf.gov.in என்ற இணையதளத்தை அணுகவும்.

Exit mobile version