ஆசிரியர் காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு TRB அறிவிப்பு

அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் காலியாகவுள்ள பணி இடங்களை நிரப்புவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் அவ்வப்போது தேர்வுகளை நடத்தி வருகிறது.

2020-2021ம் ஆண்டுக்கான அறிவிப்பில் தமிழ் 271, ஆங்கிலம் 192, கணிதவியல் 114, இயற்பியல் 97, வேதியியல் 191, விலங்கியல்109, தாவரவியல் 92, பொருளாதாரவியல் 289, வணிகவியல் 313, வரலாறு 115, புவியியல் 12, அரசியல் அறிவியல் 14, வீட்டு அறிவியல் 3, இந்திய கலாசாரம் 3, உயிர் வேதியியல் 1, உடற்கல்வி இயக்குநர் (நிலை 1) 39, கணினி பயிற்றுவிப்பாளர் 44 என மொத்தம் 2,207 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஆண்டு செப்டம்பர் 9ம் தேதி தேர்வு வாரியம் வெளியிட்டது. இவர்களுக்கு மாதம் ₹36,900-₹1,16,600 என சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டது. இதற்கான தேர்வு 12.02.2022 முதல் 20.02.2022 வரை நடைபெற்றது. இந்த தேர்வை 2,13,893 பேர் எழுதினர். இதற்கான விடைக்குறிப்பும் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் 2,207 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் பழைய காலிப்பணியிடங்கள் 247 இருந்த நிலையில், தற்போதைய காலிப் பணியிடங்கள் 1,960 என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஒட்டுமொத்த காலியிடங்கள் 3,237 ஆக உயர்ந்துள்ளன.

இதுபற்றி மேலும் அறிய http://www.trb.tn.nic.in/pg2021/03082022/PGAmendment_03_08_22.pdf சென்று தெரிந்து கொள்ளலாம்.

Exit mobile version