பந்தலூரில் பெய்த மழை

பந்தலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே காலை முதல் மதியம் வரை வெயிலும், தொடர்ந்து மாலை வேளைகளில் மழையும் பெய்து வருகிறது. அதன்படி நேற்று பந்தலூர், எருமாடு போன்ற பகுதிகளில் பலத்த மழையானது பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியுள்ளது. குறிப்பாக எருமாடு கிராம நிர்வாக அலுவலகத்தின் அருகே மழைநீர் குளம் போல தேங்கி நின்று காட்சி அளித்தது. இதனால் அந்த பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல முடியாமல் கடும் அவதிப்பட்டனர். இதுபோல உப்பட்டி, பாட்டவயல், பிதிர்காடு, நெலாக்கோட்டை, சேரம்பாடி, கரியசோலை உள்பட பல பகுதிகளிலும் கூட பலத்த மழை பெய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version