5 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் – ரசிகர்கள் சந்திப்பு

சென்னை, பனையூரில் உள்ள அலுவலகத்தில் நடிகர் விஜய் தனது ரசிகர்களை சந்திக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பில் விஜய் மக்கள் இயக்கத்தின் மூன்று மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொள்ள உள்ளனர்.

தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா மற்றும் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த நிர்வாகிகளும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.

இதையடுத்து சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில், நாமக்கல், சேலம், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களுடன் நடிகர் விஜய் புகைப்படம் எடுத்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version