விமானத்தில் கடத்தி வந்த 6.88 கிலோ தங்கம் பறிமுதல்6 பேர் கைது

விமானத்தில் கொண்டுவரப்பட்ட 6.88 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஷார்ஜாவில் இருந்து நேற்று கோவைக்கு வந்த ஏர் அரேபியா விமான பயணிகளை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். இந்த விசாரணையில் நாசர் என்ற நபர் வடசென்னை படத்தில் வருவதுபோல் ஆசனவாயில் 2.1 கிலோ தங்கத்துகள்களை அரைத்து அதை இரண்டு பிளாஸ்டிக் கவரில் போட்டு ஆணுறைக்குள் வைத்து சொருகியிருந்தார் என்பது கண்டறிய பட்டுள்ளது.

பின்னர் இதே போல தர்மராஜ் என்பவர் மொத்தம் மூன்று பாக்கெட்டில் 610 கிராம் தங்கத்தை பதுக்கியுள்ளார். மேலும் சாகுல் நம்மீது என்பவரும் 943 கிராம் தங்க துகள்களையும் பாக்கெட்டில் அடைத்து ஆசன வாயில் மறைத்து கடத்தி வந்துள்ளனர். இது தவிர யுவராஜ், பாட்ஷா, சாஜிப் ஆகியோர் தாங்கள் அணிந்து வந்த ஆடைகளில் தங்க துகள்களை பசை போல் அரைத்து வேதிப்பொருட்களுடன் கலந்து ஒட்டி கடத்தி வந்தனர்.

இந்த 6 பேரையும் கைது செய்தவர்கள் இவர்களிடமிருந்து ரூ.3.6 கோடி மதிப்பிலான 6.88 கிலோ எடையிலான 24 காரட் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

Exit mobile version