மூதாட்டியை தாக்கி 50 ஆயிரம் பறித்த பெண் சுற்றிவளைப்பு

மூதாட்டியை தாக்கி 50 ஆயிரம் திருடிய இளம்பெண் கைது.

நுங்கம்பாக்கம் மகாலிங்கபுரம் சரஸ்வதி தெருவை சேர்ந்தவர் மீனாட்சி. இவரது மகன் அமெரிக்காவில் வசிப்பதால், மீனாட்சி தனியாக வசித்து வருகிறார். நேற்று முன்தினம் அருகில் உள்ள வங்கிக்கு இவர் சென்றுள்ளார், மேலும் அதனை தொடர்ந்து 50 ஆயிரம் எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வந்தார்.

அவரை பின்தொடர்ந்து ஒரு பெண் வந்துள்ளார், வீட்டிற்குள் நுழைய முயன்ற இவரை மீனாட்சி கவனித்துள்ளார். இதனால் இவரை தாக்கியுள்ளார் அந்த பெண், அவரை தாக்கியதுடன் 50 அயிரத்தை பறித்துக்கொண்டு தப்பி ஓடினார். பின்னர் மீனாட்சியின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்தனர்.

இதனை பார்த்த இளம்பெண் அவர்களிடமிருந்து தப்பி ஓட மதில் சுவரின் மீது எறியுள்ளார். அதன் பின் இதை பார்த்து பக்கத்து வீட்டை சேர்ந்த பெண் ஒருவர், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து, கொள்ளைக்கார பெண்ணை சுற்றி வளைத்து பிடித்தார். போலீசுக்கு தகவல் தெரிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தவர்கள் அந்த இளம்பெண்ணை சுற்றி வளைத்தனர். மேலும் அவரை விசாரித்ததில் அந்த பெண்ணை மீட்டு விசாரணை நடத்தினர். இதில், சாலிகிராமத்தை சேர்ந்த ரெஜினா பானு என்றும், இவர் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது.

Exit mobile version