பெங்களூருவில் அதிகரிக்கும் தொற்று… கொரோனா பாதிப்பில் சிக்கித் தவிக்கும் கர்நாடகா…

பெங்களூருவில் அதிகரிக்கும் தொற்று… கொரோனா பாதிப்பில் சிக்கித் தவிக்கும் கர்நாடகா…

கர்நாடகா மாநிலத்தில் ஆரம்பத்தில் கொரோனா தாக்கம் குறைவாக இருந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக படிப்படியாக உயர்ந்து வருகிறது. அங்கு இன்று மட்டும் 4,764 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளதாக அந்த மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதில் அந்த மாநில தலைநகர் பெங்களூருவில் மட்டும் 2,050 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 55 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு மொத்த பலி எண்ணிக்கை 1,519 ஆக உயர்ந்துள்ளது. அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 47,069 ஆக அதிகரித்துள்ளது. இனி கர்நாடகாவில் எங்கு முழு ஊரடங்கு கிடையாது என அந்த மாநில முதலமைச்சர் எடியூரப்பா நேற்று அறிவித்த நிலையில் , அங்கு பாதிப்பு உயர்ந்து கொண்டே செல்வது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version