சிறை வளாகத்தின் செயல்பாடுகள், கைதிகளுக்கான அடிப்படை வசதிகள் குறித்து நேரில் ஆய்வு
சென்னை புழல் மத்திய சிறையில் முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
புழல் சிறை வளாகத்திற்குச் சென்ற முதலமைச்சர், அங்குள்ள சிறைகளின் செயல்பாடுகள் மற்றும் கைதிகளுக்கு செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து நேரில் பார்வையிட்டார். புழல் வளாகத்தில் விசாரணைக் கைதிகளுக்கான சிறை, தண்டனைக் கைதிகளுக்கான சிறை மற்றும் மகளிர் சிறை ஆகியவை செயல்பட்டு வருகின்றன.
சிறைத்துறை அதிகாரிகளிடம் சிறையின் தற்போதைய செயல்பாடுகள் குறித்தும் முதலமைச்சர் கேட்டறிந்தார். முதலமைச்சரின் இந்த ஆய்வைத் தொடர்ந்து சிறை நிர்வாகம் தொடர்பாக புதிய அறிவுறுத்தல்கள் அல்லது அறிவிப்புகள் வெளியாகிறதா என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
