சூர்யாவின் திரைப்படத்தை பாராட்டிய தளபதி விஜய்!!


தளபதி விஜய்யும், சூர்யாவும் நீண்ட கால நண்பர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். தன் முதல் படத்திலேயே நண்பன் விஜய்யுடன் சேர்ந்து நடித்தார் சூர்யா. அதன் பிறகு பிரெண்ட்ஸ் படத்தில் நண்பர்களாக நடித்தார்கள். அந்த படமும் அதிரிபுதிரி அடித்தது. அதற்கு பின்னர் அவர்கள் இருவரும் சேர்ந்து நடிப்பதற்கான வாய்ப்பு அமையவில்லை.

இருவரும் அண்மையில் சந்தித்துக் கொண்டார்கள். விஜய்யின் பீஸ்ட் மற்றும் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் ஆகிய படங்களை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரித்து வருகிறது. இந்நிலையில் இருவரது படங்களின் படப்பிடிப்பும் அருகருகே நடைபெற்றது.

இதையடுத்து சூர்யாவின் படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு சென்றார் விஜய். நண்பனை பார்த்த சூர்யா அவருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். இருவரும் அவரவர் படங்கள் மற்றும் பிற விஷயங்கள் பற்றி பேசியதாக தெரிய வந்துள்ளது.

அண்மையில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் வெற்றி பெற்றதற்கு விஜய்க்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார் சூர்யா. சூர்யா நடிப்பில் அண்மையில் வெளியான படத்தை குடும்பத்துடன் பார்த்து ரசித்ததாக தளபதி விஜய்யும் பாராட்டியுள்ளார்.

விஜய்யும், சூர்யாவும் அவரவர் பட கெட்டப்பில் இருந்ததால் அந்த சந்திப்பின்போது புகைப்படங்கள் எடுத்து வெளியிடவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் ஷூட்டிங் முடிந்துவிட்டது வாடிவாசல் திரைப்படத்திற்காக தயாராகி வருகிறார். அதனை அடுத்து தளபதியின் பீஸ்ட் படத்தின் ஷூட்டிங் இறுதி கட்டத்தை எட்டியிருக்கிறது. படப்பிடிப்பிற்காக மீண்டும் ஜார்ஜியாவிற்கு பயணம் மேற்கொள்ளவிருக்கிறார் தளபதி.

இதற்கிடையே விஜய்யும், சூர்யாவும் மீண்டும் சேர்ந்து நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version