கோவாக்சின் மருந்தை பரிசோதனை செய்கிறோம் -சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி

கோவாக்சின் மருந்தை பரிசோதனை செய்து வருகிறோம் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை:

கொரோனா பரவல் காரணமாக மார்ச் மாதம் இறுதியில் போடப்பட்ட ஊரடங்கு படிப்படியாக தளர்வுகள் கொண்டுவரப்பட்டது. செப்டம்பர் 1 ம் தேதி முதல் தமிழக அரசால் பொது போக்குவரத்து தனியார் நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி அளித்தது.இது குறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

தளர்வுகள் இருந்தாலும் நோய் பரவுதலை தடுக்க முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். கூட்டமான இடங்களில் தனி மனித இடைவெளி அவசியம் கடைபிடிக்கவேண்டும் . கோவாக்சின் மருந்தை பரிசோதனை செய்து வருகிறோம் மேலும் அரசு மருத்துவமனை மற்றும் ஒரு தனியார் மருத்துவமனைகளில் 300 பேருக்கு பரிசோதனை செய்ய இருக்கிறோம்.ஆயுர்வேத,சித்த மருந்துகளையும் ஐ.சி.எம்.ஆர். ஒப்புதலுடன் பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Exit mobile version