இந்தியாவில் மே மாதத்தில் நடக்க இருந்த ஐ.பி.எல் போட்டி கொரோனா பரவலால் தள்ளிப்போனது
தற்போது ஐ.பி.எல். போட்டி வரும் செப்டம்பர் மாதம் 19-ந்தேதியில் இருந்து நவம்பர் மாதம் 10-ந்தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கிறது. இதற்காக ஐபிஎல் அணிகள் வருகிற ஆகஸ்ட்21-ந்தேதி இந்தியாவில் இருந்து புறப்பட தயாராகி கொண்டிருக்கிறார்கள். அங்கு சென்றபின் அவர்கள் அனைவரும் தங்களை சில நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டு அதன்பின் பயிற்சியில் ஈடுபடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் தற்போது உள்ள நாட்களிலும் பயிற்சி மேற்கொள்ள CSK விரும்புகிறது. ஆகஸ்ட் 15-ந்தேதியில் இருந்து CSK அணியில் உள்ள இந்திய வீரர்களை மட்டும் அழைத்து ஆறு நாட்கள் கொண்ட பயிற்சி முகாம் திட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளது. இதற்கான அனுமதியை தமிழக அரசிடம் சென்று கேட்டுப் பெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் சென்னை வீரர்கள் ஆகஸ்ட் 15 முதல் சேப்பாக்கத்தில் பயிற்சியை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.