30 அடி ஆழ கிணற்றில் விழுந்த யானையை மீட்கும் பணி தீவிரம்…

தருமபுரி அருகே 30 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்துள்ள யானையை மீட்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

தருமபுரி மாவட்டத்தில் பாலக்காடு எனும் பகுதியில் பஞ்சப்பள்ளி சின்னாறு அருகே ஏலகுண்டூர் என்ற இடத்தில் தண்ணீர் இல்லாத கிணற்றில் இன்று அதிகாலையில் பெண் யானை ஒன்று தவறி விழுந்தது. குழியில் விழுந்த யானையின் பிளிறல் சத்தம் கேட்டு அங்கு இருந்த மக்கள் ஓடி வந்து பார்த்தனர். அப்போது யானை 30 அடி ஆழ கிணற்றுக்குள் யானை உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது.

இதுகுறித்து அங்குள்ள மக்கள் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதனை கேட்ட வனத்துறையினர் சம்பவ இடத்திற்க்கு விரைந்தனர். தற்போது அங்கு உள்ள யானையை மீட்கும் போராட்டத்தில் வனத்துறையினர் ஈடுபட்டு உள்ளனர்.

Exit mobile version