அசாமில் கனமழை; பிரம்மபுத்திரா நதியில் கரைப்புரண்டு ஓடும் வெள்ளத்தால் மக்கள் பாதிப்பு

அசாமில் கனமழை; பிரம்மபுத்திரா நதியில் கரைப்புரண்டு ஓடும் வெள்ளத்தால் மக்கள் பாதிப்பு

வடகிழக்கு மாநிலங்களில் வெளுத்து வாங்கும் கனமழையால் பிரம்மபுத்திராவில் அபாய அளவை தாண்டி கரைப்புரண்டு ஓடும் வெள்ளத்தால், 28 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

அசாம் மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் பல இடங்களில் அபாய அளவை தாண்டி ஓடும் வெள்ளத்தால் மாநிலத்தில் உள்ள 33 மாவட்டங்க​ளில் 28 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன.

இதோடு 40 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், தற்போது வரை வெள்ளத்தில் சிக்கி 76 பேரும், மின்னல் தாக்கி 26 பேரும் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் வெள்ளத்தில் சிக்கிய 2389 பேர் மீட்கப்பட்டு உள்ள நிலையில், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்கள் தண்ணீரில் தத்தளித்து வருகின்றன. மேலும் 24 மாவட்டங்களில் அமைக்கப்பட்டு உள்ள 711 முகாம்களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும்

Exit mobile version