1 ஒருகோடி வீடுகளுக்கு தேசியக்கொடி வழங்க திட்டம்

தமிழகத்தில்  ஒருகோடி வீடுகளுக்கு தேசியக்கொடி வழங்க பாஜக திட்டமிட்டுள்ளது.

நாட்டின் 75வது சுதந்திர தினம் வரும் ஆகஸ்டு 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு “வீடுகள் தோறும் தேசியக்கொடி” என்ற திட்டத்தின் கீழ் ஆகஸ்டு 13 முதல் ஆகஸ்டு 15ம் தேதி வரை அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்ற பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

எனவே, தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களையும் சுதந்திர தின விழாவில் ஈடுபடுத்தவும், அனைவரின் வீடுகளிலும் தேசியக்கொடியை பறக்கவிடவும், தமிழகம் முழுவதும் ஒரு கோடி வீடுகளுக்கு தேசியக்கொடி வழங்க பாஜக திட்டமிட்டுள்ளது. மேலும், சுதந்திர போராட்ட வீரர்களை இளைஞர்கள் தெரிந்து கொள்ளும் விதமாக அக்கட்சியின் சார்பில் பள்ளி, கல்லூரிகளில் சுதந்திரதின பேச்சுப்போட்டி, சைக்கிள் பேரணி, நடைபயணம் போன்ற நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

Exit mobile version