Splendor +ஐ மட்டும் திருடும் திருடன் வசமாக சிக்கினான்

புதுச்சேரியில் 28 இருச்சக்கர வானங்களை (ஸ்பிளண்டர் பிளஸ்) திருடிய கடலூர் பகுதியை சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரியில் சமீப காலமாக இருச்சக்கர வாகனங்கள் திருடுபோகும் சம்பவங்கள் அதிகரித்து வந்தன. போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்தும் பயனில்லை. இந்த நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு நம்பர் பிளேட் இல்லாத இருச்சக்கர வாகனத்தை எடுத்து வந்த வாலிபரை போலீசார் மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அந்த வாலிபர் கடலூர் அருகே கிடையார்குப்பத்தை சேர்ந்த சவுந்திரராஜன் (25) என்பதையும், மதுக்கடை அருகே நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை திருடி வந்ததையும் ஒப்புக்கொண்டார். மேலும், 27 ஸ்பிளண்டர் பிளஸ் வாகனங்களை திருடியுள்ளதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்தார். இதையடுத்து, அவரிடம் இருந்து மொத்தமாக 28 ஸ்பிளண்டர் பிளஸ் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Exit mobile version