ஒண்டிவீரன் தபால்தலை வெளியீட்டு விழா

ஒண்டிவீரன் தபால்தலையை தமிழக ஆளுநர் ரவி வெளியிட்டார்.

இந்திய சுதந்திர போராட்ட வீரர் ஒண்டி வீரன் நினைவு தபால்தலை வெளியீட்டு விழா இன்று திருநெல்வேலியில் நடைபெற்றது.

இந்த விழாவில் பங்கேற்ற தமிழக ஆளுநர் ரவி ஒண்டிவீரன் தபால்தலையை வெளியிட அதை தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் பெற்றுக்கொண்டார். மேலும் இந்த நிகழ்ச்சியில், மத்திய தகவல் தொடர்புத்துறை இணை அமைச்சர் தேவுசிங் ஜெய்சிங் பாய் சவுகான், சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் ஏ.நாராயணசாமி, தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Exit mobile version