TNPSC குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும்.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர், உதவி இயக்குநர் (ஊரக வளர்ச்சித்துறை) உள்ளிட்ட பணிகளில் காலியாக உள்ள 92 பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டது. இதற்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் www.tnpsc.gov.in என்ற டிஎன்பிஎஸ்சி இணையதளம் வாயிலாக சென்று விண்ணப்பிக்க வேண்டும். இந்த நிலையில் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை (22.08.2022) கடைசி நாள் என்றும் அதன்பிறகு சேவை நிறுத்தப்படும் என்றும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. மேலும், ஆகஸ்டு 27 முதல் ஆகஸ்டு 29ம் வரை திருத்தம் மேற்கொள்ளலாம் என்றும் அக்டோபர் 30ம் தேதி முதல்நிலை தேர்வு நடைபெறும் என்றும் கூறியுள்ளது.

Exit mobile version