திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை முதல் அனைத்து மாநில பக்தர்களும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கொரோனா தொற்று பரவல் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ளூர் பக்தர்களை தவிர பிற மாநில பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு தேவஸ்தான நிர்வாகம் தடை விதித்திருந்தது.
இந்நிலையில் தரிசனம் செய்வது குறித்து தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாளை முதல் அனைத்து மாநில பக்தர்களும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். நாளை முதல் இரவு 11.30 மணி வரை இலவச தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படுகிறது.
இலவச தரிசனத்திற்காக நாள்தோறும் வழங்கப்பட்டு வந்த 2 ஆயிரம் டிக்கெட்டுகள் தற்போது 8 ஆயிரம் டிக்கெட்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.