வரலாறு காணாத பெட்ரோல்-டீசல் விலை உயர்வு… அதிர்ச்சியில் சாமானிய மக்கள்!!

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து ரூ.106ஐ நெருங்கியுள்ளது சாமானிய மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினசரி நிர்ணயிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடைப்பிடித்து வருகின்றன. அதன்படி, பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது.

தமிழக பட்ஜெட் அறிவிப்பின் போது பெட்ரோல் ரூபாய் மூன்று விலை குறைப்பு செய்யப்பட்டது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வை சந்தித்துள்ளதால், இந்தியாவில் வரலாறு காணாத அளவில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் பெட்ரோல் விலை நேற்று லிட்டருக்கு ரூ.105.43 ஆகவும் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.101.25 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் சென்னையில் பெட்ரோல் விலை இன்று லிட்டர் ஒன்றுக்கு 31 காசுகள் அதிகரித்து ரூ.105.74க்கும் மற்றும் டீசல் விலை 33 காசுகள் அதிகரித்து ரூ.101.92க்கும் விற்பனையாகிறது.

இந்த விலை உயர்வு இன்று காலை முதல் அமலுக்கு வந்தது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து கடுமையாக உயர்ந்து வருவது வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு கடும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

Exit mobile version