பிரதமர் மோடி பிறந்தநாள்… சுகாதாரத்துறையினர் மேற்கொண்ட புதிய முயற்சி

பிரதமரின் பிறந்தநாளை முன்னிட்டு 2 கோடி தடுப்பூசி செலுத்த மத்திய சுகாதாரத்துறை முடிவு.


பிரதமர் நரேந்திர மோடியின் 71வது பிறந்தநாள் இன்று. இதனை நாடுமுழுவதும் பாரதிய ஜனதா கட்சியினர் இலவசங்கள் வழங்குதல், மரம் நடுதல் , இனிப்பு வழங்குதல் , கொரோனா விழிப்புணர்வு செய்தல் என பலமுறையில் கொண்டாடி வருகிறார்கள்; மத்திய அரசும் பிரதமரின் பிறந்த நாளன்று புதிய திட்டங்களை தொடங்கி வைக்க திட்டமிட்டு உள்ளனர்.

இதேபோல குஜராத் , ஹரியானா , கர்நாடகா உள்ளிட்ட பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை இன்று செயல்படுத்த உள்ளனர். இதனிடையே மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தரப்பில் இன்று நாடு முழுவதும் ஒரே நாளில் 2 கோடிக்கும் அதிகமான டோஸ் தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தியுள்ளனர். அதன்படி, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் தரவுகளில் ( 16.09.2021 ) மாநில மற்றும் யூனியன் அரசுகளிடம் 5 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி கையுறுப்பு உள்ளது. ஆகவே 2 கோடி டோஸ்-க்கும் அதிகமான தடுப்பூசியை செலுத்தி முடிக்க உரிய அதிகாரிகளிடம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மண்டாவியா அறிவுறுத்தி உள்ளார். மேலும், கொரோனா விழிப்புணர்வு திட்டங்களை பெருமளவில் கொண்டு சேர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

Exit mobile version