ரோடெரி கிளப் திறப்பு விழாவில் பங்கேற்கும் டாக்டர் பிளாரன்ஸ் ஹெலன் நளினி

திருச்சியில் அமைந்துள்ள சக்தி ரோடெரி கிளப்பின் திறப்பு நிகழ்ச்சிக்கு டாக்டர் பிளாரன்ஸ் ஹெலன் நளினி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் அவருடன் நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா, ரோட்டெரி ஆளுநர் திருமதி ஆனந்த ஜோதி ஆகியோரும் கலந்து கொண்டனர்.இந்த குழுவில் உறுப்பினராக இணைவதற்கு தனக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

டாக்டர் பிளாரன்ஸ் ஹெலன் நளினி குழந்தைகளின் கல்வி உரிமைக்காக பல்வேறு முன்னெடுப்புகளை செய்து வருபவர். இதற்காக அவர் சர்வதேச மேடைகளிலும் கவனம் ஈர்க்கும் விஷயங்களைச் செய்து வருகிறார்.சமீபத்தில் சர்வதேச சாதனைகளின் புத்தகத்தில் இடம்பெறுவதற்காக மிகப்பெரிய விழிப்புணர்வு பரப்புரையையும் சென்னையில் அவர் நடத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version