எஸ்.பி.பி யில் உடல் சற்று குணமடைந்திள்ளதாக அவர் மகன் தகவலை வெளியிட்டுள்ளார்.

எஸ்.பி.பி சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். பின்னர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் வெண்டிலேட்டா் மற்றும் எக்மோ போன்ற உயிர் காக்கும் மருத்துவச் சாதனங்களின் மூலம் அவருக்குச் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. மேலும், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்து வந்த நிலையில் கடந்த சில தினங்களாக அவரது உடல்நிலை முன்னேற்றம் அடைந்த வருகிறது.
இவர் தன் குரலாலும் தன் பாடலாலும் பல்லாயிரக்கணக்கான மக்களை கட்டி இழுத்தவர். இவர் கொரோனாவில் பாதிக்கப்பட்டபோது ஒட்டமொத்த திரையுலகமும் இவருக்காக பிராத்தித்தது.இப்போது இவரின் உடல் நிலை முன்னேற்றம் இவர்களின் ரசிகர்களுக்கும், திரையுலக பிரபலங்கலுக்கும் மிகுந்த அளித்து வருகிறது.
இவருது உடலநிலையை பற்றிய தகவலை அவரது மகனும் பாடகருமான எஸ்.பி.பி சரண் கூறியுள்ளார்.அவர் கூறுகையில் தந்தையின் உடல்நிலை சீராக உள்ளது. நானும் எனது சகோதரியும் இன்று அவரை சந்தித்தோம். எனது சகோதரியை பார்த்து அவர் மகிழ்ச்சி அடைந்தார்’ என்று கூறியுள்ளார்.
அதனால் ரசிகர்கள் அனைவரும் அவர் கூடுதல் வேகத்தில் மீண்டு வந்து தன் குரலால் அனைவரையும் ஆனந்தத்தில் ஆழ்த்துவார் என எதிர்ப்பார்க்கபடுகிறது.