போலி வயதுச் சான்றிதழ் வழங்கினால் 2 ஆண்டுகள் தடை : பி.சி.சி.ஐ அறிவிப்பு

வயதுச் சான்றிதழ் மோசடியைக் கட்டுப்படுத்த பி.சி.சி.ஐ முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது

இந்திய கிரிக்கெட்டில் விதிமுறைகள் மற்றும் நெறிகளைப் பின் பற்றி சரியான வகையில் போட்டிகள் நடத்தும் பொறுப்புள்ள பி.சி.சி.ஐ நிறுவனம் ஆக்.3 ஆம் தேதி புதிய வழிமுறைகளை அறிவித்தது குடியேற்றம், வயது போன்றவற்றில் மோசடியை குறைக்கும் விதமாக இந்திய கிரிக்கெட் வாரியம் பல முயற்சிகள் எடுத்து வருகிறது.

இது குறித்து பி.சி.சி.ஐ தலைவர் சௌரவ் கங்குலி பேசுகையில், “அனைத்து பிரிவுகளிலும் சமமாக வாய்ப்புகள் அமைக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். மோசடிகளை கட்டுக்குள் கொண்டு வர பல முயற்சிகளை செய்யத் திட்டமிட்டுள்ளோம். இது போன்ற மோசடிகள் இனி கடுமையாக தண்டிக்கப்படும் என்றும், கிரிக்கெட்டின் நேர்மையை பாதுகாக்க இவை உதவும் என்றும் அவர் தெரிவித்தார்.

Exit mobile version