ஓ பன்னீர் செல்வத்தின் மகன் எம்.பி. ரவீந்திரநாத்தின் தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கு…

தேர்தல் வெற்றிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை நிராகரிக்க கோரிய எம்.பி. ரவீந்திரநாத் குமாரின் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஓ. பன்னீர்செல்வம் அவர்களின் மகன் கடந்த ஆண்டு தேனீ மாவட்டத்தில் எம்.பி. தேர்தலில் தேனீ தொகுதியில் களமிறங்கினார். பல மாவட்டத்தில் அதிமுக தோல்வி உற்ற நிலையில் பன்னீர்செல்வம் அவர்களின் மகன் வெற்றி கண்டார். அதனை அனைவரும் விமர்சித்து வந்தனர். அவர் 76 ஆயிரத்து 319 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து தேனி மக்களவைத் தொகுதி வாக்காளர் மிலானி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அவர் தாக்கல் செய்த மனுவில் ‘ ஓட்டுக்காக எம்.பி. ரவீந்திரநாத் குமார் பணம் கொடுத்ததாகவும், தேர்தல் நேரத்தில் பணம் பட்டுவாடா இங்கு அதிகம் நடைபெற்றதாகவும் அவர் தனது மனுவில் குற்றம் சாட்டியிருந்தார். இவர்கள் பணம் கொடுத்துதான் இந்த தேர்தலில் ஜெயித்தார் என திட்டவட்டமாக அவர் கூறி இருந்தார்.

இந்த வழக்கின் விசாரணை நீதிபதி எம் எஸ் ரமேஷ் முன்னிலையில் நடைபெற்று வந்தது. அதனை தொடர்ந்து ரவீந்திரநாத் தன் மீது தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்யுமாறு கூறி மனுதாக்கல் செய்திருந்தார். இதன் வழக்கை விசாரித்த நீதிபதி இந்த வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தார்.

தற்போது இந்த வழக்கிற்கு தீரப்பு அளிக்கப்பட்டுள்ளது. அவர் வழங்கிய தீர்ப்பில், ‘எம்.பி. ரவீந்திரநாத் அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கு ஆரம்ப கட்ட முகாந்திரம் உள்ளது.எனவே எம்.பி. ரவீந்திரநாத் எதிரான தேர்தல் வழக்கு தொடர்ந்து நடைபெறும். தேர்தல் வெற்றிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை நிராகரிக்க கோரிய எம்.பி. ரவீந்திரநாத் குமாரின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என இந்த வழக்கின் நீதிபதி கூறி இருக்கின்றார்.

Exit mobile version