சென்னை அணி எழுச்சி பெறுமா? கே.எல்.ராகுல் அரைசதம்:சென்னை அணிக்கு 179 ரன்கள் இலக்கு

பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் இந்த தொடரில் மீண்டும் ஒரு அரைசதம் அடித்து, சென்னை அணிக்கு 179 ரன்கள் இலக்காக பஞ்சாப் அணி வழங்கியது.
klragul

துபாயில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான இன்றைய 2 வது ஐ.பி.எல் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.அதனை தொடர்ந்து பஞ்சாப் அணி சார்பாக கேப்டன் கே.எல்.ராகுல்,அகர்வால் களம் இறங்கினர்.ஆரம்பம் முதலே இருவரும் அடித்து ஆட,விக்கெட் இழப்பின்றி 8 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 61 ரன்கள் எடுத்து இருந்தது.சாவ்லா வீசிய 8.1 வது ஓவரில் அகர்வால்(26 ரன்கள்,19 பந்துகள்) சாம் கர்ர்னிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆக,அடுத்து களம் இறங்கிய மந்தீப் சிங் சாவ்லா வீசிய 11 வது ஓவரில் 2 சிக்ஸர்கள் அடித்து அசத்தினார்.

தொடர்ந்து அடிக்க முயற்சி செய்த மந்தீப் சிங்(27ரன்கள்,16 பந்துகள்) அடுத்த ஓவர் வீசிய ஜடேஜா பந்தில் ராயுடுவிடம் கேட்ச் கொடுத்து நடையைக்கட்ட ,பஞ்சாப் அணி 13 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்கள் எடுத்து இருந்தது.அடுத்து வந்த பூரன் ஜடேஜா பந்தில் ஒரு பௌண்டரி அடித்து அசத்த,அடுத்த ஓவர் போட்ட சர்துல் பந்தில் கேப்டன் ராகுல் ஒரு சிக்ஸர்,2 பௌண்டரி ஓட விட்டு அரை சதத்தை கடந்தார்.மறுமுனையில் பூரன் கிடைத்த பந்துகளை சிக்ஸர்களுக்கு பறக்க விட,பஞ்சாப் அணி 16 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் எடுத்து இருந்தது.

சர்துல் வீசிய 18 வது ஓவரில் பூரன்(33 ரன்கள்,17 பந்துகள்) ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆக,அதே ஓவரில் கேப்டன் ராகுலும்(63 ரன்கள்,52 பந்துகள்) நடையை கட்டினார்.19 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்து இருக்க,சர்துல் வீசிய கடைசி ஓவரில் சர்பராஸ் கான் 2 பௌண்டரிகள் அடித்து அசத்த,20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 178 ரன்கள் அடித்து சென்னை அணிக்கு 179 ரன்கள் இலக்காக வழங்கியது.

Exit mobile version