சென்னை அணியின் சிறப்பான பந்துவீச்சால் ஹைதராபாத் அணி ரன் எடுக்க தடுமாறி தோல்வியை தழுவியது.

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான இன்றைய ஐ.பி.எல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.அதனை தொடர்ந்து சென்னை அணியில் வாட்சன் மற்றும் ராயுடுவின் சிறப்பான பாட்னர்ஷிப்பால் ஹைதராபாத் அணிக்கு 168 ரன்கள் இலக்காக வழங்கியது.ஹைதராபாத் அணியில் தொடக்க வீரர்களாக பேரிஸ்டவ்,கேப்டன் வார்னர் களம் இறங்க,சாம் கர்ர்னின் சிறப்பான பந்து வீச்சால் வார்னர் 9 ரன்களில் வெளியேறினார்.
அடுத்த வந்த மனிஷ் பாண்டே வந்தவுடன் ஒரு பௌண்டரி அடித்து அசத்த,1 ரன்னுக்கு தேவையில்லாமல் ஆசை பட்டு பிராவோவின் டைரக்ட் ஹிட்டால் நடையை கட்டினார்.ஓரளவு நிதானமாக ஆடிய பேரிஸ்டவ் ஜடேஜா வீசிய 10 வது ஓவரில் கிளீன் போல்ட் ஆக,மறுமுனையில் வில்லியம்சன் ஜடேஜா பந்தில் பௌண்டரிகளை ஓட விட்டு 13 ஓவர் முடிவில் ஹைதராபாத் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 82 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது.பிராவோ வீசிய 14 வது ஓவரில் கார்க்,வில்லியம்சன் ஒரு பௌண்டரிகள் அடிக்க, கரண் ஷர்மா பந்தில் கார்க்(16 ரன்கள்,18 பந்துகள்)ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.16 ஓவர் முடிவில் ஹைதராபாத் 109 ரன்களை கடக்க,24 பந்துகளில் 59 ரன்கள் தேவையாக இருந்தது.பிராவோ வீசிய 17 வது ஓவரில் விஜய் சங்கர்(12 ரன்கள்,7 பந்துகள்) ஒரு சிக்ஸர் அடித்து ஜடேஜாவிடம் கேட்ச் கொடுக்க,அதன் பின்னர் வில்லியம்சன் ஒரு பௌண்டரி அடித்து அரை சதத்தை கடந்தார்.
கரண் சர்மா வீசிய அடுத்த ஓவரில் வில்லியம்சன் ஒரு பௌண்டரி அடித்து அவுட் ஆக,அடுத்து களம் இறங்கிய ரஷித் கான் 2 பௌண்டரி,ஒரு சிக்ஸர் பறக்க விட்டார்.12 பந்துகளில் 27 ரன்கள் ஹைதராபாத் அணிக்கு தேவையாக இருக்க,சர்துல் 19 வது ஓவர் சிறப்பாக வீசி ரஷித் கானை வெளியேற்ற,கடைசி ஓவர் பிராவோ 1 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 1 விக்கெட் எடுக்க,ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழந்து 147 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது.சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்த ஐ.பி.எல் தொடரில் 3 வது வெற்றியை பதிவு செய்தது.
சென்னை அணி சார்பில் கரண் சர்மா,பிராவோ தலா 2 விக்கெட்களும்,சாம் கர்ர்ன்,ஜடேஜா,சர்துல் தலா 1 விக்கெட் எடுத்து இருந்தனர்.
சென்னை அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாய் இருந்த ரவீந்திர ஜடேஜா ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.