2025ம் ஆண்டு பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெறும் என அறிவிப்பு

2025-ம் ஆண்டு  பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐசிசி பொதுக்குழு கூட்டத்தில் நடைபெற்ற விவாதத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. இதன்படி 2025-ம் ஆண்டு 50 ஓவர், பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்தும் வாய்ப்பை இந்தியா பெற்றுள்ளது. இதேபோல் 2024ம் ஆண்டு 20 ஓவர் பெண்கள் உலகக்கோப்பை போட்டி வங்காளதேசத்திலும், 2026ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை போட்டி இங்கிலாந்திலும் நடத்துவதற்கு ஐசிசி ஒப்புதல் அளித்துள்ளது.

-பா.ஈ.பரசுராமன்.

Exit mobile version