100 பேருக்கு தலா ₹1 லட்சம் பரிசு

சிலம்பம் வாத்தியார்களுக்கு தலா ₹1 லட்சம் வீதம் 100 பேருக்கு வழங்கப்படும் என்று அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேட்டி ஒன்றில் அமைச்சர் மெய்யநாதன் கூறியதாவது:தமிழக பாரம்பரிய விளையாட்டுகளை மீட்டெடுக்க தொடர் நடவடிக்கைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்து வருகிறார். சிலம்பம் விளையாட்டை மீட்டெடுக்கும் வகையில், தமிழகத்தில் சிறந்த சிலம்பம் ஆசான்கள் 100 பேருக்கு தலா ₹1 லட்சம் வீதம் வழங்கி கவுரவிக்கப்படவுள்ளனர். இதற்காக ₹1 கோடி நிதி ஒதுக்கப்பட்டு முதலமைச்சர் கையால் விருது வழங்கி பாராட்டு விழா நடத்தப்படவுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

வேலைவாய்ப்பில் விளையாட்டுத்துறைக்கான 3% உள் ஒதுக்கீட்டில் சிலம்பம் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version