IPL போட்டிகளில் இருந்து மலிங்கா விலகல்!!!

கொரோனா நோய் தொற்று காரணமாக தள்ளி வைக்கப்பட்ட IPL போட்டிகள் இந்த மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்க விருக்கிறது ஏற்கனவே சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ரெய்னா விலகியுள்ள நிலையில், இப்போது மும்பை இந்தியன்ஸ் வீரர் மலிங்கா விலகியுள்ளார்.
Sri Lanka’s Lasith Malinga attends a training session at Bristol County Ground in Bristol, southwest England, on June 9, 2019, ahead of their 2019 World Cup match against Bangladesh (Photo by Saeed KHAN / AFP) (Photo credit should read SAEED KHAN/AFP/Getty Images)

அவரது தந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் அவரை அருகில் இருந்து கவனித்துக் கொள்வதற்காக IPL போட்டியை துறந்துள்ளார். 37 வயதான லசித் மலிங்காIPL கிரிக்கெட்டில் இதுவரை அதிக விக்கெட்டுகள் (122 ஆட்டத்தில் 170 விக்கெட்) வீழ்த்திய பெருமைக்கு சொந்தக்காரர் ஆவார்.

கடந்த ஆண்டு IPL இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கடைசி ஓவரில் 9 ரன் தேவைப்பட்ட போது, சிறப்பாக பந்து வீசி 7 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து மும்பை அணியின் வெற்றிக்கு வித்திட்ட மலிங்காவின் விலகல், நிச்சயம் அந்த அணிக்கு பின்னடைவு என்று தான் சொல்லப்படுகிறது . மலிங்கா விலகல் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவருக்கு பதிலாக ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் பேட்டின்சன் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். 30 வயதான பேட்டின்சன் இதுவரை IPL போட்டிகளில் விளையாடியது கிடையாது.

Exit mobile version